தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் மேலும் 1,088 புதிய கரோனா பாதிப்புகள்; மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் - நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் திட்டம்

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,088 மீண்டும் புதிய கரோனா நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறை
சுகாதாரத்துறை

By

Published : Apr 13, 2022, 7:56 PM IST

புதுடெல்லி:மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (ஏப்.13) கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,088 புதிய கரோனா நோய்ப்பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 10,870 ஆக உள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.03 விழுக்காடாகும்.

நாட்டில் தினசரி நோய்ப்பாதிப்பு விகிதம் 0.25 % ஆகவும், நோய்ப் பாதிப்பிலிருந்து குணமானவர்களின் விகிதம் தற்போது 98.76 %ஆகவும் உள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நேற்று (ஏப்.12) இதுவரை மொத்தம் 4,25,05,410 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின்கீழ், எவ்வளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், 'நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ், இதுவரை மொத்தம் 186.07 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 191.19 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்ட அதே நேரத்தில், 19.88 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இருப்பு கைவசம் உள்ளன. கரோனா நோய்க்கான தடுப்பூசிகளை உலகளாவிய மயமாக்கல் என்ற அடிப்படையில் முதற்கட்டமாக, 75% தடுப்பூசிகளை மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கொள்முதல் செய்து இலவசமாக வழங்கும்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாட்டின் கோவிட் தடுப்பூசி திட்ட நிலவரத்தை வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சகம்

ABOUT THE AUTHOR

...view details