டெல்லி: ஐந்தாம் தலைமுறை தொலைதொடர்பு நெட்வொர்க்கான 5ஜி பணி நிறைவடையும் தருவாயில், 6ஜி பணி நடைபெறுவதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார்.
டெல்லியில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 8) நடைபெற்ற இந்தியா தொலைத்தொடர்பு 2022 பன்னாட்டு வர்த்தகக் கண்காட்சியில் அஷ்வினி வைஷ்ணவ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "நாடு அதன் சொந்த 4ஜி மையம் (Core), ரேடியோ நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளது. மேலும் 6ஜி நெட்வொர்க்கிற்கான பணி நடைபெற்றுவருகிறது" என்றார்.
உலக நாடுகளுக்கு உகந்த வகையில் இந்தியத் தயாரிப்பு
முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட வடிவமைப்பு, 4ஜி ஸ்டேக் ஆகியவை இறுதிகட்ட மேம்பாட்டுப் பணியில் உள்ளதாகவும் இன்னும் சில மாதங்களில் வெளியாகலாம் என்றும் தொலைத் தொடர்புத் துறைச் செயலரும், டிசிசி தலைவருமான ராஜாராமன் உறுதிசெய்துள்ளார்.
இத்துறையின் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், 5ஜி தொழில்நுட்பம் மேம்பாட்டுப் பணியில் இறுதிகட்டத்தில் இருக்கிறது. இது தொழில்நுட்ப நிறுவனங்களை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றார்
மேலும் அந்த உயர் அலுவலர், "இந்திய, உலகளாவிய சந்தைகளில் ஃபின்டெக் (FinTech) தீர்வுகளின் பரவலுக்கு 5ஜி வழிவகுக்கும். உலக நாடுகளுக்கு உகந்த வகையில் 5ஜி தொழில்நுட்பக் கருவிகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
2022-23ஆம் ஆண்டுக்குள் 5ஜி சேவை