தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கடந்த 8 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சி - பிரதமர் மோடி ட்விட்டர்

உலக யானை தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்

india-home-to-about-60-per-cent-of-all-asian-elephants-pm-on-world-elephant-day
india-home-to-about-60-per-cent-of-all-asian-elephants-pm-on-world-elephant-day

By

Published : Aug 12, 2022, 5:21 PM IST

டெல்லி:இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலக யானை தினத்தில், யானைகளை பாதுகாக்கும் நமது உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறேன். ஆசிய யானைகளில் 60 சதவீதத்தை இந்தியா கொண்டுவந்துள்ளது குறித்து, நீங்கள் மகிழ்ச்சியடையலாம். கடந்த 8 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யானைகள் பாதுகாப்பில், ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.”

“யானைகள் பாதுகாப்பில் வெற்றியை, மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான மோதலை குறைக்கும் பெரும் முயற்சிகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படுவதுடன், பொருத்திப்பார்க்கவேண்டும். சுற்றுச்சூழல் மீதான ஆர்வத்தை வலுப்படுத்துவதில், உள்ளூர் சமுதாயத்தினரையும், அவர்களது பாரம்பரிய ஞானத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மத்திய உள்துறை அமைச்சக விருது பெறும் 5 தமிழ்நாடு காவலர்கள்

ABOUT THE AUTHOR

...view details