தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 20, 2021, 12:51 PM IST

ETV Bharat / bharat

இந்தியாவில் மேலும் 36,571 பேருக்கு கரோனா பாதிப்பு

இந்தியாவில் நேற்று (ஆக.19) ஒரேநாளில் கரோனா தொற்றால் 540 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 36 ஆயிரத்து 571 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 23 லட்சத்து 58 ஆயிரத்து 829ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (ஆக.19) மட்டும் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை, 39 ஆயிரத்து 555ஆக உள்ளது. இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 15 லட்சத்து 61 ஆயிரத்து 635 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போதுவரை 3 லட்சத்து 65 ஆயிரத்து 605 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இது 150 நாள்களுக்குப் பிறகு பதிவாகும் குறைந்த எண்ணிக்கை ஆகும். மேலும் சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் 1.12 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 540 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 33 ஆயிரத்து 589 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மொத்தமாக இதுவரை 57 கோடியே 22 லட்சத்து 81 ஆயிரத்து 488 கரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details