இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 80 ஆயிரத்து 834 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 94 லட்சத்து 39ஆயிரத்து 929ஆக உள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிகளவில் கரோனா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தியாவில் நேற்று (ஜுன்.12) மட்டும் 3,303 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை மூன்று லட்சத்து 70 ஆயிரத்து 384ஆக உயர்ந்துள்ளது.