தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 24, 2021, 10:56 AM IST

ETV Bharat / bharat

மூன்று லட்சத்தைத் தாண்டிய கரோனா உயிரிழப்பு!

நாட்டில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்று லட்சத்து 3 ஆயிரத்து 720 ஆக அதிகரித்துள்ளது.

covid
கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 22 ஆயிரத்து 315 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 67 லட்சத்து 52 ஆயிரத்து 447ஆக அதிகரித்துள்ளது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவில், கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில், குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்று(மே.23) ஒரே நாளில் 35,483 பேருக்கு தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட அதிகமாகும். தமிழ்நாட்டிற்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிராவில் 26,672 பேருக்கு தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் நேற்று (மே.23) 4,454 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 3 ஆயிரத்து 720 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 37 லட்சத்து 28 ஆயிரத்து 11 ஆக உள்ளது.

தற்போது 27 லட்சத்து 20 ஆயிரத்து 716 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை, மொத்தமாக 19 கோடியே 60 லட்சத்து 51 ஆயிரத்து 962 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details