தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் மேலும் 44 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி - கரோனா நிலவரம்

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 44 ஆயிரத்து 643 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்தியா
இந்தியா

By

Published : Aug 6, 2021, 11:11 AM IST

தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 44 ஆயிரத்து 643 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாதித்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 18 லட்சத்து 56 ஆயிரத்து 757ஆக அதிகரித்துள்ளது. தற்போது நான்கு லட்சத்து 14 ஆயிரத்து 159 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 464 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், நாட்டின் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 26 ஆயிரத்து 595ஆக அதிகரித்துள்ளது.

பரிசோதனை, தடுப்பூசி நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றுவரை (ஜூலை 5) நாடு முழுவதும் 47 கோடியே 65 லட்சத்து 33 ஆயிரத்து 650 நபர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 49 கோடியே 53 லட்சத்து 27 ஆயிரத்து 595 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details