கடந்தாண்டு மே மாதம், கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா - சீனா இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் பலர் உயிரிழந்தனர். இந்த மோதலைத் தொடர்ந்து, லடாக் எல்லையில் இரு நாட்டினரும் படைகளைக் குவித்ததால், பதற்றம் நிலவிவந்தது.
படைகளைத் திரும்பப்பெற்று அமைதியை நிலைநாட்ட பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக, கடந்த பிப்ரவரியில் நடந்த 10ஆம் கட்ட பேச்சுவார்த்தையின் பலனாக கிழக்கு லடாக்கின் பாங்காங் சோ ஏரியின் வடக்கு, தெற்கு கரைகளிலிருந்து இரு நாடுகளின் படைகள் திரும்பப்பெறப்பட்டன. இதையடுத்து, பல மாதங்களாக நீடித்துவந்த பதற்றம் தணிந்தது.