தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'தடுப்பூசி போட்டுக்கிட்ட சர்டிஃபிகேட் காட்டுனாதான் மதுபானம்..' - உ.பி.யில் அசத்தல் ட்ரிக் - உ.பி.யில் அசத்தல் ட்ரிக்

லக்னோ: கரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட சான்றிதழ்களைக் காட்டுபவர்களுக்கு மட்டுமே, மதுபானம் வழங்கும் புதுமையான முறை உத்தரப்பிரதேச மாநிலத்தில் எட்டாவா மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

மதுபானம்
மதுபானம்

By

Published : May 31, 2021, 3:06 PM IST

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. அந்த வகையில், தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக, உத்தரப் பிரதேச மாநிலம் புதுமையான நடவடிக்கையினை கையாண்டுள்ளது.

அதன்படி, எட்டாவா மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழைக் காட்டினால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுபானக்கடை ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது, இது தொடர்பாக முறையாக எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மாணவிக்குப் பாலியல் தொல்லை: கராத்தே பயிற்சியாளர் கெபி ராஜ் கைது!

ABOUT THE AUTHOR

...view details