ஜாம்ஷெட்பூர்: ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக வைரம், பன்னா சுரங்கங்கள் தடையின்றி தொடர்வதாகவும், இவை தெரிந்தாலும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஜாம்ஷெட்பூரிலிருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில், நக்சல் பாதிப்புக்குள்ளான டும்ரியா, குடபந்தா, முசபானி பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வைரங்கள் கடத்தப்படுகின்றன.
இது குறித்து, ஏஐஎம்ஐஎம் மாநிலத் தலைவர் தரியாத் அஹ்மத் ஷெரீஃப் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "குடபந்தா, டும்ரியா மாவட்டங்களில் நீண்ட காலமாக வைரங்கள், பன்னா சுரங்கங்கள் நடந்துவருகின்றன. அப்போதைய மாநில அரசுகள் இதைக் கட்டுப்படுத்த முயற்சித்தன.
ஆனால் அவை இன்று பரந்துவிரிந்து காணப்படுகிறது. மத்திய அரசின் நடைமுறையால் மாநில அரசு பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டியுள்ளது. தனியாருக்குத் தாரைவார்ப்பதைத் தடுத்து நிறுத்தி குத்தகை முறையிலான சுரங்கத்தை ஜார்கண்ட் மாநில அரசு நடத்த வேண்டும்.