டெல்லி: இந்திய விமானப்படை பிரான்ஸிலிருந்து மேலும் மூன்று ரஃபேல் விமானங்களை பெறவிருக்கிறது. பிரானஸ் நாட்டிலுள்ள இஸ்திரேஸ் என்ற இடத்திலிருந்து கிளம்பும் இந்த மூன்று விமானங்களும் எங்கும் நிற்காமல் எட்டுமணி நேரத்தில் இந்தியாவிலுள்ள ஜாம் நகருக்கு நவம்பர் 4ஆம் தேதி வந்துசேரும்.
நடுவானில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பவும், பாதுகாப்புக்காகவும் பிரான்ஸ் விமானப்படை விமானங்கள் அணிவகுத்து வரும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே பிரான்ஸிடமிருந்து ஐந்து ரஃபேல் விமானங்களை இந்தியா பெற்றுள்ளது.