ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் மிருகசீர கார்த்திகையின்போது 'மீன் பிரசாதம்' வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஹைதராபாத்தில் உள்ள நம்பல்லி கண்காட்சி மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெறும்.
இதில், உயிருடன் இருக்கும் சிறிய விரால் மீனின் வாயில் மஞ்சள் நிற மூலிகை மருந்தை வைத்து, அதனை நோயாளிகளின் வாயில் வைத்து விழுங்க வைப்பார்கள். சைவம் சாப்பிடுபவர்களுக்கு இந்த மூலிகை மருந்து மீனுக்கு பதிலாக, வெல்லத்தில் கலந்து கொடுக்கப்படும். இந்த மருந்தை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு எடுத்துக் கொண்டால் ஆஸ்துமா நோயிலிருந்து குணமடையலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த மீன் பிரசாதத்தைப் பெற ஆண்டுதோறும், ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, ஒடிஷா, சத்தீஸ்கர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆஸ்துமா நோயாளிகள் வருவார்கள். பாத்தினி ஹரிநாத் கவுட் மற்றும் அவரது குடும்பத்தினர் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மீன் மருந்தை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள். கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜூனில் மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
இதையும் படிங்க:Train Accidents: ஜூன் 2 முதல் 9 வரை இந்தியாவில் நிகழ்ந்த ரயில் விபத்துகள்!