தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரொட்டிக்காக தற்கொலையா? - அதிர்ச்சி சம்பவம்! - பீகார் மாநிலம்

மனைவி ரொட்டி செய்து தர மறுத்ததால், மனமுடைந்து கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Husband
Husband

By

Published : Jun 15, 2022, 8:54 PM IST

பிகார்: பிகார் மாநிலம், வைஷாலி மாவட்டத்தில் பாஸ்மிலராம் என்ற கிராமத்தைச் சேர்ந்த முகமது சபீர்(30) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த 13-ம் தேதி பணி முடித்து இரவு வீடு திரும்பிய சபீர், இரவு உணவுக்காக ரொட்டி செய்து தரும்படி மனைவியிடம் கேட்டுள்ளார். கணவன் - மனைவி இடையே ஏற்கெனவே பிரச்னை இருந்ததாகத் தெரிகிறது. இதனால் ரொட்டி செய்து தர சபீரின் மனைவி மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சபீர் நள்ளிரவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

கணவர் தற்கொலை செய்து கொண்டதை கண்ட மனைவி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், சபீரின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கிண்டல் செய்த நபர்களை தட்டிக்கேட்ட பெண்..முகத்தில் கத்தியால் கொடூரமாக தாக்கிய மூவர்: ம.பி.யில் அதிர்ச்சி

ABOUT THE AUTHOR

...view details