தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழர்களை கொலையாளிகளாக சந்தேகித்த வழக்கு - 17 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நீதி!

கோயிபுரம் ரமாதேவி கொலை வழக்கில் ரமாதேவியின் கணவர் ஜனார்த்தனனை 17 வருடங்களுக்குப் பின்னர் புலனாய்வுக் குழுவினர் கைது செய்துள்ளனர்.

By

Published : Jul 12, 2023, 1:21 PM IST

கோயிபுரம் ரமாதேவி கொலை வழக்கு
கோயிபுரம் ரமாதேவி கொலை வழக்கு

பத்தனம்திட்டா: கோயிபுரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தபால் அலுவலர், ஜனார்த்தனன் நாயர். இவரது மனைவி ரமாதேவி (50) கடந்த 2006ஆம் ஆண்டு மே 26ம் தேதி மாலை கொலை செய்யப்பட்டார். ரமாதேவியின் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டுக்குள் பிணமாக கிடந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் கத்தி போன்ற கூரிய ஆயுதம் கொலைக்குப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

அந்த சமயத்தில் ஜனார்த்தனன் வீட்டின் அருகே, கட்டடம் கட்டும் பணி நடந்து வந்தது. அங்கு தமிழகத்தைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவர் வேலை பார்த்து வந்தார். அவருடன் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் வசித்து வந்தார். ரமாதேவி கொல்லப்பட்ட பிறகு, சுடலைமுத்துவும் அவருடன் வசித்த பெண்ணும் காணாமல் போனார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இந்த கொலையில் இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர்.

இதனை அடுத்து, சுடலைமுத்து மற்றும் அவருடன் நீண்ட நாட்களாக இருந்த பெண் ஆகியோர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை நடந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு சுடலைமுத்துவுடன் வசித்து வந்த பெண் தென்காசியில் சிக்கினார். ஆனால், விசாரணையில் கொலைக்கு பின்னணியில் அவர்கள் இல்லை என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ரமாதேவி கொலையில், ரமாதேவியின் கையில் கிடைத்த முடிதான் முக்கிய ஆதாரம். விசாரணையில், ஒரு கையில் 36 முடிகளும், மறுபுறம் 4 முடிகளும் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் பிறகு, அந்த முடி இழைகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. ஆனால், கொலை நடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் சோதனையின் அறிக்கை கிடைத்தது.

அறிவியல் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பிய முடிகள் ரமாதேவியின் கணவர் ஜனார்த்தனுடையது என விசாரணைக் குழு கண்டுபிடித்தது. இதுவே வழக்கில் முக்கிய ஆதாரம். முதற்கட்டமாக அறிவியல் சோதனை முடிவுகள் வந்தாலும் கணவனா என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தவில்லை. ஆனால், வழக்கின் விசாரணை பலனளிக்கவில்லை என்றும், குற்றப்பிரிவு விசாரணை தேவை என்றும் ஜனார்த்தனன் உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

அதன்பின், உள்ளூர் போலீசார் விசாரித்த வழக்கு, குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக ஜனார்த்தனன் உயர் நீதிமன்றத்தை அணுகியதையடுத்து, குற்றப்பிரிவு ஆய்வாளர் சுனில்ராஜ் வழக்கு விசாரணையை மேற்கொண்டார். இதன் பின்னர் குற்றப்பிரிவு விசாரணை ரமாதேவியின் கணவர் ஜனார்த்தனன் பக்கம் திரும்பியது. பின்னர் அந்த வகையில் புதிய புலனாய்வுக் குழு வழக்கை விசாரித்தது.

இதனை அடுத்து, ஜனார்த்தனன் நாயர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) கைது செய்யப்பட்டார். ரமாதேவியின் சடலத்தில் இருந்து அவரது கணவர் ஜனார்த்தனனின் தலைமுடி கண்டெடுக்கப்பட்டதே முக்கிய ஆதாரமாக வைத்து, அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் திருவல்லா குற்றப்பிரிவு போலீசார் ரமாதேவியின் கணவர் ஜனார்த்தனனை கைது செய்தனர்.

ஜனார்த்தனனுக்கு தனது மனைவி ரமாதேவி மீது ஏற்பட்ட சந்தேகமே இந்த கொலைக்கு காரணம் என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இதன் மூலம், கோயிபுரம் ரமாதேவி கொலை வழக்கில் ரமாதேவியின் கணவர் ஜனார்த்தனனை 17 வருடங்களுக்கு பின்னர் புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:போலி ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்... இளைஞர்களே, இளம்பெண்களே உஷார்!

ABOUT THE AUTHOR

...view details