பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி, பயங்கரவாத ஊடுருவல், அத்துமீறி தாக்குதல் உள்ளிட்ட செயல்களில் அவ்வப்போது ஈடுபட்டுவருகிறது. இந்தியாவிற்குள் ஆயுதங்களையும் கடத்தி வரும் முயற்சியும் நடந்துவருகிறது..
அந்த வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியிலிருந்து ஆயுதங்களை கடத்தும் பாகிஸ்தான் முயற்சியை இந்திய ராணுவம் மீண்டும் தடுத்து நிறுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகக் காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.