தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆ.ராசாவை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் - பேருந்து மீது கல்வீச்சு - A Raja statement Hindu

இந்து மதத்தை பற்றி தவறாக பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசவை கண்டித்து புதுச்சேரியில் இந்து முன்னணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஆ.ராசாவை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் - பேருந்து மீது கல்வீச்சு - போலீசார் குவிப்பு
ஆ.ராசாவை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் - பேருந்து மீது கல்வீச்சு - போலீசார் குவிப்பு

By

Published : Sep 27, 2022, 11:08 AM IST

புதுச்சேரி:இந்து மதத்தை பற்றியும், இந்து பெண்கள் பற்றியும் தவறாக பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசா மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவரை கண்டித்தும் புதுச்சேரியில் இன்று (செப் 27) ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, இன்று காலை முதல் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. அரசு பள்ளிகள் இயங்கி வருகிறது.

அதேபோல் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசு பேருந்துகள் மட்டும் போலீஸ் பதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி வில்லியனூர் பகுதியில், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் சென்ற தமிழ்நாடு அரசு பேருந்து மற்றும் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வந்த அரசு பேருந்து என இரண்டு பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்து மதத்தை பற்றி தவறாக பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசவை கண்டித்து புதுச்சேரியில் இந்து முன்னணி சார்பில் முழு அடைப்பு போராட்டம்

பொதுச்சொத்தை சேதப்படுத்துவர்கள் மற்றும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க:ஜெயலலிதா இருந்திருந்தால் குண்டர் சட்டம் பாய்ந்திருக்கும் - ஆ.ராசா பேச்சு குறித்து ஜெயக்குமார் காட்டம்

ABOUT THE AUTHOR

...view details