இதில் 30 பேர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகமும், பேரிடர் மேலாண்மை ஆணையமும் ஈடுபட்டுள்ளன. காய்கறி வியாபாரிகளும் தங்களது வாகனங்களுடன் அப்பகுதியில் மாட்டிக்கொண்டுள்ளனர்.
தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் ராம்லால் மார்கண்டா, மாவட்ட அலுவலர்கள் மீட்பு பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். லஹால்- ஸ்பிட்டி பகுதியில் மாட்டிக்கொண்ட வெளி மாநிலங்களை சேர்ந்த பயணிகள், கனமழை, வெள்ளம் காரணமாக மாட்டிக்கொண்டதாகவும் அரசு உதவ முன்வர வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உள்ளூர்வாசிகள் தங்களுக்கு தேவையான உதவிகளை செய்துதருவதாகவும் குறிப்பிட்டனர்.