பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு, பெலகாவி மற்றும் மைசூரு என பல்வேறு நகரங்களில் உள்ள பெரும்பாலான கோவில்களில் இன்று (மே9) அதிகாலை 5 மணிக்கெல்லாம் ஹனுமன் சாலிஜா, சுப்ரபாதம், ஓம்காரம் உள்ளிட்ட பக்தி பாடல்கள் ஒலித்தன. பல்வேறு கோவில்களில் ஸ்ரீ ராம சேனா தொண்டர்கள் நேரடியாக சென்று ஹனுமன் சாலிஸா உள்ளிட்ட பல்வேறு பக்தி பாடல்களை பாடினார்கள்.
பிரமோத் முத்தாலிக்: ஸ்ரீ ராம சேனா இயக்கத்தின் தலைவர் பிரமோத் முத்தாலிக் கர்நாடகாவில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்துக் கோவில்களில் திங்கள்கிழமை (மே9) அதிகாலை 9 மணிக்கெல்லாம் ஹனுமன் சாலிஸா ஒலிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்று அதிகாலை 5 மணிக்கெல்லாம் 1,000க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்களில் ஹனுமன் சாலிஸா உள்ளிட்ட பக்தி பாடல்கள் ஒலிக்கப்பெற்றுள்ளன. முன்னதாக, மசூதிகளில் உள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்றுவதில் கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
ஹனுமன் சாலிஸா பாடல்கள்: இந்த ஒலிபெருக்கிகளை அகற்ற மாநில அரசு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரமோத் முத்தாலிக் கோவில்களில் ஹனுமன் சாலிஸா, சுப்ரபாதம், ஓம்காரம் உள்ளிட்ட பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்படும் என்றார்.
அதன்படி கோவில்களில் காலை 5 மணிக்கெல்லாம் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. இதற்கிடையில், பெலகாவி மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றில் ஸ்ரீ ராம சேனா தொண்டர்கள் அதிகாலை 5 மணிக்கெல்லாம் ஹனுமன் சாலிஸா ஓதினார்கள். இந்தப் பரப்புரை பெலகாவியின் பல்வேறு இடங்கள், விஜயாநகர், விஜய்பூர், மைசூரு உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக நடந்தது.