ஆமதாபாத்: கடந்த 2015ஆம் குஜராத்தில் பட்டிதார் சமூகத்தின் இட ஒதுக்கீடுக்காக பல போராட்டங்களை நடத்திய ஹர்திக் பட்டேல், 201ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 18ஆம் தேதி ஹர்திக் பட்டேல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பினார்.
அதில் நாட்டின் நலன்களுக்கு காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டையாக மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் குஜராத் மாநில பாஜக தலைவர் பட்டில் தலைமையில் அக்கட்சியில் இணைந்தார்.