ஜக்தல்பூர்: கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து சத்தீஸ்கரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அனைவரும் வீட்டில் அடைந்து கிடக்கும் இந்த வேளையில், உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு பஸ்டார் இளைஞர்கள் குழு உணவளித்து வருகிறது.
இதுகுறித்து அக்குழுவைச் சேர்ந்த பரமேஸ்வர், சமூக பொறுப்புடைய செயல்களில் நாங்கள் ஈடுபட விரும்புகிறோம். கரோனா ஊரடங்கால் உணவகங்கள், கடைகள் மூடியிருக்கின்றன. இந்த வேளையில் உணவுக்காக தவிக்கும் ஏழை மக்களுக்கு நாங்கள் உணவளித்து வருகிறோம் என்றார்.