டெல்லி:உலகம் முழுவதும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். அதிகமான இளைஞர்களைக் கொண்டுள்ள இந்தியா, இதுபோன்ற சமூக வலைதளங்களுக்கு பெரும் சந்தையாக விளங்குகிறது. மாணவர்கள், நடுத்தர வயதினர் என சமூக வலைதளங்களில் பயனாளர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
தற்போது சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்குவதற்கு அலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி மட்டுமே போதுமானது. மின்னஞ்சல் முகவரியை உருவாக்குவதற்கும் அலைபேசி எண் மட்டுமே தேவை என்பதால், ஒரே எண்ணில் பல மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்படுகிறது. இது பல போலி சமூக வலைதளப் பக்கங்களை உருவாக்குவதற்கும் வழி செய்கிறது.
எதுவும் வேண்டாம்