மங்களூர்: வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தியதில், மங்களூர் விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் இருந்து ரூ. 67 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயில் இருந்து வந்த இரண்டு பயணிகளிடம் சோதனை மேற்கொண்டதில், கர்நாடக மாநிலம் பட்கல் பகுதியைச் சேர்ந்தவரிடம் தங்கப் பேஸ்ட் அடங்கிய 5 பந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை 641.41 கிராம் தங்கத்தை உள்ளடக்கியிருந்தது.