தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 8, 2022, 5:00 PM IST

ETV Bharat / bharat

ஆந்திரா, தெலங்கானா இளைஞர்களை குறிவைக்கும் போதைப்பொருள் மாஃபியா கும்பல் - ஹைதராபாத் போலீஸ் தகவல்... !

கோவாவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல், ஆந்திரா மற்றும் தெலங்கானா இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்வதாக ஹைதராபாத் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Goan
Goan

ஹைதராபாத்: தெலங்கானாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சிலரை ஹைதராபாத் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அண்மையில் கைது செய்தனர். அவர்களைத் தொடர்ந்து கோவாவில் பலர் கைது செய்யப்பட்டனர். அதில் 11 பேர் வெளிநாட்டினர். இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கோவாவை மையமாகக் கொண்ட அந்த கும்பல், தெலங்கானா மற்றும் ஆந்திராவிலிருந்து கேளிக்கை கொண்டாட்டங்களுக்காக கோவா செல்லும் இளைஞர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்கின்றனர். அவர்கள் கோவாவை விட்டு சென்றாலும், இளைஞர்களை அடிமையாக்கும்வரை தொடர்ந்து போதைப்பொருளை விற்பனை செய்கின்றனர். அவர்கள் தங்களிடம் பணம் இல்லை என கூறும் நேரத்தில், அவர்களை விற்பனையாளர்களாக மாற்றிவிடுகிறார்கள் என தெரியவந்துள்ளது.

இந்த கும்பலில், விகாஸ் நாயக், ரமேஷ் சவுகான், ஸ்டீவ், எட்வின், சஞ்சா கோவேகர், துக்காராம் சல்கன்கர் ஆகியோர் போதைப்பொருள் விற்பனையில் மூளையாக செயல்பட்டு வந்ததாகவும், சுமார் எட்டு ஆண்டுகளாக இவர்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. இவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாகவே போதைப்பொருளை விற்பனை செய்கின்றனர். ஆன்லைனில் போதைப்பொருளை ஆர்டர் செய்தால், கொரியர் மூலம் போதைப்பொருளை அனுப்பி வைக்கின்றனர். இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் இவர்கள் தங்களது நெட்வொர்க்கை விரிவுபடுத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நெட்வெர்க்கில் மேலும் பலர் கைது செய்யப்படக்கூடும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மாரடைப்பு ஏற்பட்டு 8 வயது சிறுவன் உயிரிழப்பு... மயக்க மருந்து காரணமா?

ABOUT THE AUTHOR

...view details