தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 20, 2021, 9:13 AM IST

ETV Bharat / bharat

கரோனா ஊரடங்கு: உ.பி.யில் தளர்வு, கோவாவில் நீடிப்பு

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கோவாவில் ஜூன் 28ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு
கரோனா ஊரடங்கு

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து சில மாநிலங்கள் படிப்படியாக தளர்வுகள் அளித்து வருகின்றன. அந்த வகையில் உத்திரப் பிரதேசத்தில் அமலில் இருக்கும் இரவுநேர ஊரடங்கு உத்தரவில் இரண்டு மணி நேரம் தளர்த்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் வார நாள்களில் இரவு ஒன்பது மணி வரை கடைகள், மால்கள், உணவகங்களைத் திறக்கவும் அனுமதிக்கிறது. அதேபோல் திருமணங்கள், மற்ற நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 50 பேர் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கோவாவில் ஜூன் 28ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மல்டிபிளெக்ஸ், பொழுதுபோக்கு மண்டலங்கள் தவிர ஷாப்பிங் மால்களில் உள்ள கடைகளை, காலை ஏழு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கர்நாடகா ஊரடங்கு: 16 மாவட்டங்களுக்கு மட்டும் தளர்வுகள்!

ABOUT THE AUTHOR

...view details