தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குழந்தையின் கையில் பட்டாக்கத்தி கொடுத்து சபதம் - latest news

புதுச்சேரி: குழந்தையின் கையில் பட்டாக்கத்தி கொடுத்து இளைஞர்கள் கேக் வெட்டி, சபதம் எடுக்க செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தையின் கையில் பட்டா கத்தி கொடுத்த சபதம்!!
குழந்தையின் கையில் பட்டா கத்தி கொடுத்த சபதம்!!

By

Published : May 25, 2021, 5:05 PM IST

புதுச்சேரி திப்புராயபேட்டையைச் சேர்ந்தவர், திப்லான். முன்விரோதம் காரணமாக கடந்த ஆண்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் தாவீத், கவுசிக் பாலசுப்பிரமணி, தணிகையரசு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிலர் ஜாமீனில் வெளியே வந்தனர்.

கடந்த வாரம் திப்லானின் பிறந்தநாள் அன்று அவரது கல்லறையில் நண்பர்கள் கூடினர். அப்போது, திப்லானின் குழந்தையின் கையில் பட்டாக்கத்தியை கொடுத்து கேக் வெட்டினர்.

கொலை செய்தவர்களை பழி வாங்கும் வகையிலான பாடலையும் பாடி சபதம் எடுத்துக் கொண்டனர்.

இந்த வீடியோவானது இணையத்தில் பரவியது. இந்நிலையில், ஒதியஞ்சாலை பகுதியில் ஆயுதங்களுடன் சென்ற மணி என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: கருப்பு, வெள்ளையை விட ஆபத்தாம் மஞ்சள் பூஞ்சை... தடுப்பது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details