அஸ்ஸாம்: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் கம்ரூப் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்தனர். சிறுமியின் பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரியவர இளைஞர் குறித்து விசாரித்துள்ளனர்.
அதில் இளைஞருக்கு எச்ஐவி பாசிட்டிவ் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இளைஞரை கண்டித்துள்ளனர். இருப்பினும் சிறுமி இளைஞருடன் மூன்று முறை வீட்டை வீட்டு வெளியேறியுள்ளார். தொடர்ந்து இருவரையும் தேடிப் பிடித்து வந்த சிறுமியின் பெற்றோர் ஒருகட்டத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.