உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தின் ரோரவர் காவல் நிலைய பகுதியில் அல் துவா என்ற இறைச்சித் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இங்கு நேற்று அமோனியா வாயு கசிந்துள்ளது. இதனால் தொழிற்சாலையில் இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
எனவே இவர்கள் அருகிலுள்ள ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட மாஜிஸ்திரேட் இண்டர் விக்ரம் சிங் மற்றும் எஸ்எஸ்பி கலாநிதி நைதானி ஆகியோர் தொழிற்சாலையை ஆய்வு செய்தனர்.