தமிழ்நாடு

tamil nadu

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு... போலீசாரின் அலட்சியத்தால் நடந்ததாக பெற்றோர் குமுறல்...

By

Published : Apr 22, 2022, 10:09 PM IST

அரசு மருத்துவமனையில் வைத்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

rape
rape

அமராவதி: ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த 23 வயதான மனவளர்ச்சி குன்றிய பெண், கடந்த 19ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, ​​அதே பகுதியை சேர்ந்த தாரா ஸ்ரீகாந்த் (26) என்ற இளைஞர், அவரை ஆசை வார்த்தை கூறி தான் ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு இரவு முழுவதும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் மருத்துவமனையில் சுற்றித்திரிந்த அந்த பெண்ணை, அங்கு பணிபுரியும் சென்னா பாபுராவ்(23), ஜோரங்குலா பவன் கல்யாண்(23) ஆகியோர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

இதனிடையே பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், போலீசார் அலட்சியமாக இருந்ததாக் கூறப்படுகிறது. இதையடுத்து ஏப்.20ஆம் தேதி அந்த பெண் மருத்துவமனையில் இருப்பது தெரியவருகிறது.

இருப்பினும் போலீசார் மீட்க போலீசார் வராததால், பெண்ணின் பெற்றோரே மருத்துவமனைக்கு சென்று மீட்டுள்ளனர். அப்போது அந்த பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், தாரா ஸ்ரீகாந்த், சென்னா பாபுராவ், ஜோரங்குலா பவன் கல்யாண் ஆகிய மூவரையும் கைது செய்தனர். போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால், கூட்டு பாலியல் வன்கொடுமை தடுத்திருக்கலாம் என்றும், இந்த அலட்சியப் போக்கால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை... 19 வயது இளைஞருக்கு 20 ஆண்டு சிறை...

ABOUT THE AUTHOR

...view details