பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள எலஹங்கா (Yelahanka) பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த இருவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். பின்னர், அந்த வீடியோவை காட்டி சிறுமியை மிரட்டி மீண்டும், பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இம்முறை தங்களது நண்பர்கள் 6 பேரையும் கூட்டு சேர்த்துக் கொண்டு, சிறுமியை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அந்தக் கொடூர கும்பல்.
சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு திரும்பியபோது, பெற்றோர் கேட்டதற்கு காரமாக சாப்பிட்டதால் அழுவதாக கூறியுள்ளார். சிறுமியின் நிலைமைப் பார்த்த பெற்றோர் மீண்டும் விசாரித்ததில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கூறியுள்ளார்.