பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் தலைவருமான சித்து முசேவாலா சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த சௌரப் மகாகல் என்பவரை புனே போலீசார் கைது செய்துள்ளனர்.
பஞ்சாபி மொழிப் பாடகரும், காங்கிரஸ் பிரமுகருமான சித்து முசேவாலா கடந்த மே 29ஆம் தேதி காரில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். சித்துவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை பஞ்சாப் அரசு திரும்பப்பெற்ற 24 மணி நேரத்திற்குள் இச்சம்பவம் நடந்தது.