தமிழ்நாடு

tamil nadu

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா சுட்டுக் கொலை: பாலிவுட் பிரபலங்கள் இரங்கல்

By

Published : May 30, 2022, 2:09 PM IST

பஞ்சாப்பைச் சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூஸ் வாலா சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அஜய் தேவ்கன் உட்பட பாலிவுட் பிரபலங்கள் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் பாடகர் சித்துவிற்கு பாலிவுட் பிரபலங்கள் ட்விட்டரில் அஞ்சலி!
பஞ்சாப் பாடகர் சித்துவிற்கு பாலிவுட் பிரபலங்கள் ட்விட்டரில் அஞ்சலி!

மும்பை:பஞ்சாப்பின் பிரபல பாடகரும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான சித்து மூஸ் வாலா நேற்று (மே 29) மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் சமூகவலைதளப் பக்கத்தில் அவர்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

சித்துவின் இறப்பு குறித்து அஜய் தேவ்கன் அவரது ட்விட்டர் பக்கத்தில், "சித்துவின் இறப்பு செய்தி அறிந்து அதிர்ந்து போனேன், வஹெகுரு அவர்களது குடும்பத்தாருக்கு பலத்தை கொடுக்கட்டும், என்னால் இதை கடக்க முடியவில்லை" எனப் பதிவிட்டிருந்தார்.

பஞ்சாபி பாடகர் மற்றும் நடிகர் ஷெனாஜ் கில் அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்த இளம் வயதில் இப்படியொரு இழப்பை யார் தந்தது என்று மனமுருகி பதிவிட்டிருந்தார்.

பாடகர் விஷால் தத்லானி அவரது ட்விட்டர் பக்கத்தில், "சித்து மூஸ் வாலாவை அவரது இசையின் மூலம் மட்டுமே நான் அறிவேன், ஆனால் அவரது மறைவு செய்தி என்னை ஆழமாக காயப்படுத்தியுள்ளது. இந்தியாவில் உண்மையான நவீன கலைஞர்கள் மிகக் குறைவு. அந்த பட்டியலில் அவர் முதலிடத்தில் இருந்தார். என் துன்ப மிகுதியால் என்னால் பேச முடியவில்லை. அவருடைய குரல் மற்றும் தைரியமான வார்த்தைகள் என எதையும் ஒருபோதும் மறக்க முடியாது. இது ஒரு சோகமான நாள்" எனப் பதிவிட்டிருந்தார்.

நடிகை சோனல் சௌஹன் அவரது ட்விட்டரில், "நோ! சித்து மூஸ் வாலா ? இது உண்மையா ? என்ன நடக்கிறது?" என்று ட்வீட் செய்துள்ளார். பின்னர் மற்றொரு ட்வீட்டில், "நான் முழு அதிர்ச்சியில் இருக்கிறேன்! மனித வாழ்க்கைக்கு எங்கே மரியாதை? நீங்கள் சித்துவை மிஸ் செய்வீர்கள், சித்துவின் ஆத்மா சாந்தியடையட்டும் எனவும் எழுதி இருந்தார்.

பாலிவுட் பிரபலம் சோஃபி சௌத்ரியின் ட்வீட்டில், "இது மிகவும் சோகமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்தி! சித்து மூஸ் வாலா பஞ்சாபில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் ஒரு இசை சின்னம், ஒரு ஜாம்பவான்! அவரது குடும்பத்தினருக்கும் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று நம்புகிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவன் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.

ரன்வீர் சிங், வருண் தவான், சாரா அலி கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் தங்களது இரங்கல் செய்தியை அவர்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். நடிகர் வருண் 'RIP' உங்கள் வார்த்தைகளும் இசையும் வாழும். இதை நம்ப முடியவில்லை என்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் எழுதியிருந்தார்.

இதையும் படிங்க: பாதுகாப்பை திரும்ப பெற்ற ஆம்ஆத்மி அரசு - காங்கிரஸ் பிரமுகர் சித்து மூஸ்வாலா சுட்டுக் கொலை!

ABOUT THE AUTHOR

...view details