இமாச்சலப் பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும், வீட்டைச் சுற்றியும் தீ பரவியதில், பல விலங்குகள் நெருப்புக்கு இரையாகின. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விபத்து குறித்து அறிந்த அம்மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்.