தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சாமோலியில் நிலச்சரிவு - 4 பேர் உயிரிழப்பு - நிலச்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர்

தாரளி அருகே சாமோலிவில் இன்று அதிகாலை 1:30 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பெங்கரில் மூன்று வீடுகள் புதைந்தத நிலையில் 4 பேர் உயிரிழந்தனர்.

சாமோலியில் நிலச்சரிவில் 4 பேர் உயிரிழப்பு
சாமோலியில் நிலச்சரிவில் 4 பேர் உயிரிழப்பு

By

Published : Oct 22, 2022, 10:32 PM IST

தாரளி: சாமோலிவில் இன்று (அக்.22) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட ஐந்து பேர்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், 1 பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பின்பு மூன்று பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். மற்றொருவர் காயமடைந்த நிலையில், 12 வயது குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறது.

அதனையடுத்து பிண்டார் பள்ளத்தாக்கில் உள்ள பெங்கர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் இன்று இரவு 1 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ள்து. தரலி துணை-பிரிவு மாஜிஸ்திரேட் (எஸ்.டி.எம்) ரவீந்திர குமார் ஜுவந்தா கூறுகையில்,

"நிலச்சரிவைத் தொடர்ந்து, கிராமத்தின் மூன்று வீடுகள் மீது கற்பாறைகள் விழுந்து இடிந்து விழுந்தன என தகவல் கிடைத்ததும்" SDRF குழுவினர்" சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்," என்றார்.

இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மி விளையாட நண்பரின் வீட்டிலேயே திருடிய காவலர் கைது

ABOUT THE AUTHOR

...view details