தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திற்கு புதிய தலைவர்

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவராக இக்பால் சிங் லால்புரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

By

Published : Sep 10, 2021, 10:31 PM IST

Updated : Sep 11, 2021, 9:21 AM IST

Iqbal Singh Lalpura
Iqbal Singh Lalpura

பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அலுவலரான சர்தார் இக்பால் சிங் லால்புரா தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவராக தேர்வாகியுள்ளார். தற்போதைய தலைவரானா கயோருல் ஹஸன் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் இக்பால் சிங் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையில் பணிபுரியும் போது குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் லால்புரா. இவர் பாஜகவின் தேசிய செய்தித்தொடர்பாளராகவும் இருந்துள்ளார்.

நாட்டின் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பாரசிகள், ஜைனர்கள் ஆகியோரின் உரிமைகளை பாதுகாக்கவே இந்த தேசிய சிறுபான்மையினர் ஆணையம் உருவாக்கப்பட்டது.

இதையும் படிங்க:தடுப்பூசி போடவில்லை என்றால் கட்டாய விடுமுறை - அரசு ஊழியர்களுக்கு செக்

Last Updated : Sep 11, 2021, 9:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details