தமிழ்நாடு

tamil nadu

போதைப்பொருள் வழக்கு: முன்னாள் அமைச்சரின் மகன் கைது!

By

Published : Nov 9, 2020, 7:28 PM IST

பெங்களூரு: போதைப்பொருள் விற்பனை வழக்கில் முன்னாள் அமைச்சர் ருத்ரப்பா லமானியின் மகன் தர்ஷன் லமானி கைது செய்யப்பட்டார்.

Former Karnataka minister's son arrested in drug case
Former Karnataka minister's son arrested in drug case

கர்நாடக மாநிலம் பெங்களூரு போதைப்பொருள் வழக்கில் பல திரைப் பிரபலங்கள உள்ளிட்ட பல பேரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ருத்ரப்பா லமானியின் மகன் தர்ஷன் லமானியை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

அவருடன் சேர்ந்து மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் காவல் துறையினர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தை நாடி உள்ளனர். தற்போது மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க:பெங்களூரு போதைப்பொருள் வழக்கு: பினீஷ் கொடியேரிடம் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details