புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி 2021 ஜனவரி 16ஆம் தேதி முதல் போடப்பட்டுவருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 13 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நேற்று முன்தினம் (மார்ச் 1) 45 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. இதுவரை புதுச்சேரியில் 10 ஆயிரத்து 701 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.