டெல்லி:இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு சென்ற அக்-14ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் 528.367 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்துள்ளது. இது முந்தைய வாரத்தை விட 4.5 பில்லியன் டாலர் சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முந்தைய வாரத்தில் சென்ற அக்-7 வரை நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 532.868 பில்லியன் டாலராக இருந்ததாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி இந்தியாவின் வெளிநாட்டு நாணய சொத்துகள், அந்நிய செலாவணி முடிவடைந்த வாரத்தில் 2.828 பில்லியன் டாலர் குறைந்து 468.668 பில்லியன் டாலர்களாக உள்ளது. வார முடிவில் தங்கத்தின் கையிருப்பு மதிப்பு 1.5 பில்லியன் டாலர் குறைந்து 37.453 பில்லியன் டாலராக உள்ளது.