லக்னோ: உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள ஷிவ்ராஜ்பூர் கிராமத்தில் வீடு ஒன்று தீப்பற்றி எரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் ஆய்வு செய்ததில், தீப்பற்றிய வீட்டிற்குள் சடலங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், குடும்பத்தலைவர் ராஜ்குமார்(55), அவரது பேத்தி மீனாட்சி(2) உள்ளிட்ட வீட்டிலிருந்த 5 பேரை மர்மநபர்கள் அடித்துக் கொலை செய்துவிட்டு, வீட்டிற்கு தீ வைத்ததாக தெரிய வந்துள்ளது.