தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பையில் லிப்ட் அறுந்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு

மும்பை: வொர்லியில் அடுக்குமாடி கட்டடத்தின் லிப்ட் அறுந்து விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

By

Published : Jul 24, 2021, 9:57 PM IST

மும்பையில் லிப்ட் அறுந்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு
மும்பையில் லிப்ட் அறுந்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு

மும்பை மாநிலம் வொர்லி பகுதியில் புதிதாக லலித் அம்பிகா அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுவருகிறது. இக்கட்டடத்தில் உள்ள லிப்ட் கேபிள் இன்று (ஜூலை 24) மாலை திடீரென அறுந்து விழுந்தது.

லலித் அம்பிகா

இவ்விபத்தில் லிப்ட்டில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:மும்பையில் கட்டடம் இடிந்து விபத்து: மூவர் மரணம், எழுவர் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details