பிகாரின் முன்னாள் துணை முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. டெல்லியில் உள்ள சைனிக் பண்ணை இல்லத்தில் இந்த திருமண விழா நடைபெற்றது.
தனது பள்ளித் தோழியான ரச்சேல்லை திருமணம் செய்கிறார் தேஜஸ்வி. இந்து முறைப்படி திருமணம் நடைபெறும் நிலையில், திருமணத்திற்குப்பின் ரச்சேல் ராஜேஸ்வரி யாதவ் என தனது பெயரை மாற்றியுள்ளார்.
இந்த திருமணத்தில் தேஜஸ்வி தந்தை லாலு யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி ஆகியோர் திருமண சடங்குகளை மேற்கொண்டனர். தேஜஸ்வியின் மூத்த சகோதாரர் தேஜ் பிரதாப், அவரது ஏழு சகோதரிகள் ஆகியோர் என நிகழ்வில் நெருங்கிய நபர்கள் மொத்தம் 50 பேர் மட்டுமே பங்கேற்றனர்.