டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் உள்ள என்டோஸ்கோபி அறையில் ஏற்பட்ட தீயை, போராடி தீயணைப்பு வீரர்கள கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துமனையின் இரண்டாவது மாடியில் என்டோஸ்கோபி அறை உள்ளது. இதற்கு முன் இந்த அறையை புறநோயாளிகள் பிரிவாக மருத்துவமனை நிர்வாகம் பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், என்டோஸ்கோபி அறையில் உள்ள வார்டில் தீடீரென தீ பற்றியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காலை 11.54 மணிக்கு தீப்பற்றியதாக கூறப்படும் நிலையில், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்த நிகழ்விடத்திற்கு 6 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கு முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.