தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐஐடிகளில் மாணவிகள் சேர்க்கை 20 சதவீதமாக அதிகரித்துள்ளது - இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் - IITs students admissions increased

இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் மாணவிகள் சேர்க்கை 2021-22ஆம் ஆண்டில் 20 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்தார்.

இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார்
இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார்

By

Published : Dec 14, 2022, 9:25 PM IST

டெல்லி:இதுகுறித்து மாநிலங்களவையில் இன்று (டிசம்பர் 14) மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், நாடு முழுவதும் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பை தொடரும் மாணவிகளை ஊக்குவிக்க, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மாணவிகளுக்கென சிறப்பு முதுகலை உதவித்தொகைகளை வழங்குகிறது.

இதேபோல், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தொழில்நுட்பக் கல்வியில் சேரும் 10,000 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குகிறது. இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் மாணவிகளின் சேர்க்கையை மேம்படுத்த, கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் 2016ஆம் ஆண்டு 8 சதவீதமாக இருந்த மாணவிகளின் சேர்க்கை, 2021-22ஆம் ஆண்டு 20 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதேபோல், 2021-22ஆம் ஆண்டில் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களில் (என்ஐடி) மாணவிகளின் சேர்க்கை 22.1 சதவீதம் அதிகரித்துள்ளது. ஸ்டெம் (STEM) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவிகளின் சேர்க்கையில் நிலையான முன்னேற்றம் உள்ளது. இந்திய உயர் கல்வி ஆய்வறிக்கையின்படி, 2016-17ஆம் ஆண்டில் 41,97,186ஆக இருந்த ஸ்டெம் படிப்புகளின் மாணவிகள் சேர்க்கை எண்ணிக்கை 2020-21ஆம் ஆண்டில் 43,87,248ஆக அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்திற்காக ரூ.46.86 கோடி நிதி விடுவிப்பு

ABOUT THE AUTHOR

...view details