தானே (மகாராஷ்டிரா):மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானேவில் இந்து மதத்தின் ஆச்சாரம் பற்றிய பாரம்பரிய கருத்துகளுக்கு சவால் விடும் வகையில், பெண் அர்ச்சகர்கள் தானாகசே முன் வந்து அனைத்து வகையான பூஜையும் முன்னின்று நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து வருகொன்றனர்.
பெண் அர்ச்சகர்கள் அனைத்து வகையான சடங்குகளையும் செய்கின்றனர். உதாரணமாக பெயர் சூட்டு விழாக்கள், திருமணங்கள் மற்றும் திருவிழாக்கள் மற்றும் திருவிழா காலங்களில் கோயில்களில் நடத்தப்படும் பூஜைகளுக்கும் இவர்கள் அர்ச்சனை செய்கின்றனர். இதனை தானேவில் உள்ள மூத்த பெண் அர்ச்சகரான வீணா மோடக் முதன் முதலாக தொடங்கினார்.
பழங்கால ஆண் அர்ச்சகர்களின் பாரம்பரியத்தை உடைத்து, படிப்படியாக கணபதி பூஜை, மங்கள கவுரி பூஜை, லகு ருத்ரா மற்றும் சத்யநாராயண பூஜை போன்ற நிகழ்ச்சிகளில் பூஜை செய்ய அவருக்கு அழைப்புகள் வர ஆரம்பித்தன. இது குறித்து அவர் கூறுகையில் "பூஜையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு விளக்கி முழு பூஜையையும் முடிக்க குறைந்தது ஒரு மணிநேரம் ஆகும். நாங்கள் பூஜைக்கு அழைப்பவர்களையும் இதில் ஈடுபடுத்த முயற்சிக்கிறோம். எனவே நாங்கள் இளம் தலைமுறையினரிடையே பிரபலமாக இருக்கிறோம். " என்று வீணா மோதக் கூறினார்.
ராஷ்டிர சேவிகா சமிதி சார்பில் 1994-95 ஆண்டில் பிராமண சேவா சங்கத்தில் வீணை மோதக் வழிகாட்டுதலின் கீழ் பெண்கள் அர்ச்சகர் படிப்பு தொடங்கப்பட்டு 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இப்போது, 40 பெண்கள் இந்தப் அர்ச்சகர் படிப்பில் சேர்ந்துள்ளனர். நான்காண்டு படிப்புக்கு புதிதாக சேர்ந்துள்ள உறுப்பினர்களிடையே உற்சாகத்தை காண முடிகிறது.