இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை பரவிவரும் நிலையில், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
தடுப்பூசிக்கான தேவை அதிகரிப்பதால், சில மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவசர கால பயன்பாட்டுக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு இன்று (ஏப்ரல்.13) அனுமதி அளித்துள்ளது.