பீகார்: பாங்கா மாவட்டத்தில் அமர்பூர் பகுதியில் விஜயதசமி நாளன்று தந்தை ஒருவர் அவரது மகனை கழுத்தை நெறித்து நரபலி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இக்கொலை சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்கு பின் கொலை செய்தது சிறுவனின் தந்தை என உறுதி செய்யப்பட்டது.
மஹோடா கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் குஷ்பூ தேவி மற்றும் தீபக் சர்மா, இவர்களுக்கு 7 வயதில் ராகவ் குமார் என்ற ஒரு மகன் இருந்தார். தீபக் சர்மா மந்திர தந்திரம் போன்ற மூட நம்பிக்கைகளில் மிகுந்த ஆர்வம் உடையதாக கூறப்படுகிறது. தனது கணவர் மீது சந்தேகம் இருப்பதாக குஷ்பூ கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி தீபக்கை கைது செய்தனர்.