மகாராஷ்டிர மாநிலம், துல்ஜாபூர் தாலுகாவில் உள்ள கர்லா கிராமத்தைச்சேர்ந்தவர்கள், கணேஷ் ஜாம்பன் போஸ்லே மற்றும் மீராபாய் கணேஷ் போஸ்லே எனும் தம்பதியினர். கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி கணேஷ் போஸ்லே ஆட்டிறைச்சி வாங்கி வந்து, அதனை சமைக்குமாறு தனது மகள் காஜலிடம் கொடுத்துள்ளார்.
திருமணமான காஜல் தனது கணவருடன் தந்தை வீட்டிலேயே வசித்து வந்தார். ஆட்டிறைச்சியை சமைத்து வைத்து விட்டு வேறு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார் காஜல். அப்போது வீட்டுக்குள் புகுந்த நாய் ஒன்று சமைத்து வைத்திருந்த கறிக்குழம்பை ருசி பார்த்துள்ளது. இதனால் காஜலுக்கும் அவரது தாய் மீராபாய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.