தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வேளாண் சட்டங்களுகக்கு எதிராக விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம் - டெல்லி விவசாயிகள் போராட்டம்

டெல்லி: வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி புராரி மைதானத்தில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Semi Nude Protest by Farmers
Semi Nude Protest by Farmers

By

Published : Dec 10, 2020, 5:20 PM IST

மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், இன்று சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி புராரி மைதானத்தில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், "டெல்லியில் குளிர் அதிகமாக இருப்பதால் வயதானவர்களையும், குழந்தைகளையும் வீடுகளுக்கு அனுப்புமாறு அரசு வேண்டுகோள் விடுத்தது. ஆனால், எங்கள் கோரிக்கை நிறைவேறி எங்கள் உரிமைகள் பாதுக்காக்கப்படும் வரை மோடி அரசின் இந்த கறுப்புச் சட்டங்களுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை எந்த குளிரும் தடுத்து நிறுத்தாது" என்றார்.

டெல்லி புராரி மைதானத்தில் விவசாயிகளின் சுமார் ஐம்பது டிராக்டர் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கிருக்கும் விவசாயிகள் தங்குமிடம் உட்பட அரசு வழங்கும் எந்த வசதிகளையும் பயன்படுத்தவில்லை. கூடாரங்கள் அமைத்து அதிலேயே தங்குகின்றனர்.

இதுகுறித்து மற்றொரு விவசாயி கூறுகையில், "அரசின் உதவி வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களை பார்த்துக்கொள்ள எங்களுக்குத் தெரியும். இங்கு எந்த அரசு உதவிகளையும் நாங்கள் ஏற்க மாட்டோம். மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும்" என்றார்.

இதையும் படிங்க: பாஜக தேசிய தலைவர் வாகனத்தின் மீது கல்வீச்சு!

ABOUT THE AUTHOR

...view details