கர்நாடகா மாநிலம் யாதகிரி மாவட்டம் சூரபுராவில் உள்ள குவாரி ஒன்றில் சட்டவிரோதமாக வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்படிருப்பதாக அப்பகுதி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்த காவல்துறையினர் குவாரியில் சோதனையில் ஈடுபட்டனர். அந்தச் சோதனையில், 25 கிலோ எடையுள்ள ஜெலட்டின் குச்சிகள் உள்பட ஏராளமான வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.