தமிழ்நாடு

tamil nadu

சேலத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட வெடிபொருள்கள் பறிமுதல் : இருவர் கைது

திருவனந்தபுரம்: சேலத்தில் இருந்து கேரளவிற்கு கடத்தி வரப்பட்ட 7 ஆயிரம் ஜெலிட்டின் குச்சிகள், 7 ஆயிரத்து 500 டெட்டோனேட்டர்கள் ஆகியவற்றை அம்மாநில காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

By

Published : Nov 15, 2020, 5:40 PM IST

Published : Nov 15, 2020, 5:40 PM IST

பறிமுதல்  செய்யப்பட்ட வெடிப்பொருட்கள்
பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருட்கள்

கேரள மாநிலம் வாளையாறில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த அம்மாநில காவல் துறையினர், மினி லாரி ஒன்றில் தக்காளி கூடைகளில் மறைத்து கடத்திவரப்பட்ட 7 ஆயிரம் ஜெலிட்டின் குச்சிகள், 7 ஆயிரத்து 500 டெட்டோனேட்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ஆவணங்கள் ஏதுமின்றி மினி லாரியை ஓட்டி வந்த ரவி, பிரபு ஆகிய இருவரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், இந்த வெடிப்பொருள்கள் சேலத்தில் இருந்து கேரள மாநிலம் அங்கமாலி பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டதாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிங்க:

பிறந்து 14 நாள்களே ஆன ஆண் குழந்தையை மாடியிலிருந்து தூக்கி வீசிய தாய்!

ABOUT THE AUTHOR

...view details