மகாராஷ்டிராவில் காவல் முன்னாள்ஆணையர் பரம்வீர் சிங் விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. மும்பை காவல் ஆணையராக இருந்த பரம்வீர் சிங், அம்மாநில உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மாதம் ரூ.100 கோடி வசூல் செய்து தர வேண்டும் என தன்னைவற்புறுத்தியதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில் பகிரங்கமாகக் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இதையடுத்து அனில் தேஷ்முக் பதவி விலகக்கூறி பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்தன. இதற்கு தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.